ஈரோடு பெரியவலசு நால்ரோட்டில் இருந்து சம்பத் நகர் செல்லும் ரோட்டோரம் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும்போது அதிக அளவில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அங்கு குப்பைகள் கொட்டாமல் இருக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த பகுதியில் சாக்கடை கால்வாய் தூர்வாரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.