தஞ்சை கீழவாசல் பகுதி சுண்ணாம்புக்காரத்தெருவில் ரேஷன் கடை அருகே சாலையோரத்தில் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குப்பைத்தொட்டியை சுற்றி குப்பைகள் அதிகளவில் குவிந்துகிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும், குவிந்து கிடக்கும் குப்பைகளால் ரேஷன் கடைக்கு வருபவர்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?