குப்பைகளுக்கு தீ வைப்பு

Update: 2022-08-02 12:14 GMT
கரூர் மாவட்டம், குளித்தலை நகர மற்றும் கிராமப்புற பகுதிகளில் சாலையோரம் கிடக்கும் குப்பைகள், காய்ந்த மர இலைகள் போன்றவை எரிக்கப்படுகின்றன. இதில் இருந்து வெளிவரும் புகை காற்றில் கலந்து சாலையை கடந்து செல்கிறது. இதனால் அப்பகுதி சற்று புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. குப்பைகள் எரிக்கப்படும் பகுதி வழியாக வாகன ஓட்டிகள் செல்லும்போது எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரியாமல் விபத்துக்குள்ளாகும் சூழ்நிலை உள்ளது. மேலும் இந்த புகையை சுவாசிப்பதால் பல்வேறு சுவாசக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே குப்பைகளை தீயிட்டு கொளுத்துவதை பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் செய்ய வேண்டும். சாலையோரம் குப்பைகள் எரிக்கப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், குளித்தலை.

மேலும் செய்திகள்