வாய்க்காலில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2022-08-02 11:17 GMT
திட்டக்குடி அருகே ஆவினங்குடி ஊராட்சியில் உள்ள வெலிங்டன் நீர்த்தேக்க வாய்க்காலில் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அங்கு கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. மேலும் நிலத்தடி நீரும் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே வாய்க்காலில் இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

மேலும் செய்திகள்