கடலூர் மஞ்சக்குப்பம் நேரு நகர் செல்லும் சாலையோரம் பல இடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. பல நாட்களாகியும் இந்த குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றாததால், தற்போது கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. அதனால் அவ்வழியாக செல்லும் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ஆகவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.