தர்மபுரி மாவட்டம் ஏரியூர் கடைவீதி மற்றும் பஸ் நிலைய மையப்பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த குப்பைகளை தினமும் அள்ளாததால் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும்.
-காந்தி, ஏரியூர். தர்மபுரி