குப்பை குவியல்கள்

Update: 2022-08-01 14:19 GMT
சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள மணிமண்டபம் அருகில் குப்பை குவியல்கள் கிடக்கிறது. இளநீர் கழிவுகளும் அதிகளவில் கிடக்கிறது. இதனால் மழைக்காலங்களில் அதில் தண்ணீர் தேங்கி நிற்பதால், தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. அதனால் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்