சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2022-08-01 12:17 GMT

கூடலூர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமலில் உள்ளதால் திறந்த வெளியில் குப்பைகள் கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பழைய பஸ் நிலையம், அக்ரஹார தெரு உள்பட பல இடங்களில் இரவில் சாலையோரம் குப்பைகள் மலை போல் கொட்டப்படுகிறது. இதில் உள்ள உணவு கழிவுகளை தின்பதற்காக தெருநாய்கள், காட்டுப்பன்றிகள் நகருக்குள் வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் திறந்தவெளியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், வணிக நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று குப்பைகள் வாங்குவதையும் உறுதி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்