மதுரை மாவட்டம் பெத்தானியாபுரம் 64-வது வார்டு என்.எஸ்.கே. வீதியில் குப்பைகள் அதிக அளவில் தேங்கியுள்ளது. இதன் அருகில் பள்ளிகள் இருப்பதால் மாணவர்கள் குப்பைகளில் நடந்தபடியே சென்று வருகின்றனர். இதனால் அவர்களுக்கு தொற்றுநோய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே வீதிகளில் தேங்கிய குப்பைகளை அவ்வப்போது அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.