சிவகங்கை மாவட்டம் நகர் மற்றும் புறநகர் பகுதியில் சிலர் குப்பைகளை ஆங்காங்கே வீசி செல்கின்றனர். இதனால் நகரின் பல்வேறு பகுதிகள் குப்பை குவியல்களாக காணப்படுகிறது. தேங்கும் குப்பைகளில் பெரும்பாலும் மக்காத குப்பைகளே அதிக அளவில் கொட்டப்படுகிறது. மேலும் சிலர் குப்பைகளை எரியூட்டுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே வீதிகளில் குப்பைகள் தேங்காதவாறு அவ்வப்போது அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.