பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா பாடாலூர் மேம்பாலம் அருகே சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதினால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.