குப்பைகளால் சுகாதாரகேடு

Update: 2022-07-28 11:39 GMT

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மேலரத வீதியில் உள்ள சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. இந்நிலையில் இவை அகற்றப்படாமலேயே கிடப்பதால் பள்ளி மாணவ-மாணவிகள் மிகுந்த  சிரமப்படுகின்றனர். சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் குப்பைகளை தினமும் அகற்றி சுகாதாரத்தை கடைபிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருச்சுழி.

மேலும் செய்திகள்