குப்பைகளை எரிப்பதால் மக்கள் அவதி

Update: 2022-07-26 14:23 GMT

பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் மின்வாரிய அலுவலகத்துக்கு எதிரே முருகன் கோவில் உள்ளது. அதன் அருகில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குப்பைகளை கொட்டுகின்றனர். மேலும் அருகில் உள்ள மதுக்கடையில் இருந்து பிளாஸ்டிக் கப்புகளும் கொட்டுப்படுகின்றன. அதை அகற்றாமல் மாநகராட்சி பணியாளர்கள் தீவைத்து செல்கின்றனர். அப்போது அப்பகுதி மக்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். எனவே, அங்கு குப்பை தொட்டி அமைத்து முறையாக குப்பைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்