திருச்சி-பெரம்பலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள சர்வீஸ் சாலை தொடங்கும் இடத்தில் இடது புறம் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் கழிவுநீர் வாய்க்காலில் குப்பைகள் கொட்டப்படுவதினால் கழிவுநீர் செல்ல வழியின்றி அடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.