சுகாதார சீர்கேடு

Update: 2023-09-13 10:55 GMT

கோவை சாய்பாபா காலனி அழகேசன் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அங்கு தொட்டி இருந்தும், குப்பைகளை வெளியே கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் குப்பைகள் குவிந்து, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும், தொட்டியில் குப்பைகளை கொட்ட வலியுறுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்