குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-09-13 10:55 GMT

கோவை மாநகராட்சி 3-வது வார்டு அம்பிகை நகரில் இருந்து அஞ்சுகம் நகருக்கு செல்லும் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அவை காற்றில் பறந்து சாலையிலும் பரவி கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகளும், இருசக்கர வாகன ஓட்டிகளும் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அங்கு குப்பை கொட்டுவதை இனிமேலாவது தடுத்து நிறுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்