குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-09-06 16:00 GMT

கரூர்- ஈரோடு மெயின் ரோட்டில் உள்ள வடிவேல் நகரில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகள் நீண்ட தூரத்திற்கு கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகளில் பிளாஸ்டிக் கழிவுகள், வீட்டு உபயோக கழிவு பொருட்கள் உள்பட பல்வேறு கழிவு பொருட்கள் கொட்டப்பட்டு உள்ளது. மேலும் இந்த குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இப்பகுதியை கடக்கும் பொதுமக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது. இப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகள் நிரம்பி வழிந்தும் காணப்படுகிறது. எனவே இப்பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்