குப்பை தொட்டிகள் வேண்டும்

Update: 2023-09-06 09:42 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ஊராட்சியில் தர்மபுரி ரோட்டில் குப்பைகள் கொட்டுவதற்கு குப்பை தொட்டிகள் இல்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் சாலையோரங்களில் குப்பைகளை வீசி செல்கிறார்கள். அந்த குப்பைகள் அகற்றாமல் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையோரங்களில் குப்பை தொட்டிகளை வைத்து தினமும் அள்ளி தூய்மையாக  வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்