பொது இடத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்

Update: 2023-08-30 14:20 GMT

மதுரை மாவட்டம் என்.புதுக்குளம்  கண்மாய் அருகில் இறைச்சி கழிவுகள் அதிகம் கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் தெருநாய்கள் இந்த கழிவுகளை அப்பகுதி முழுவதும் சிதறி விட்டு செல்கின்றன. மேலும் இந்த கழிவுகளால் அப்பகுதி மக்களுக்கு நோய் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்