குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2023-08-30 09:28 GMT
உளுந்தூர்பேட்டை சேலம் மெயின் ரோட்டில் சுடுகாடு உள்ளது. இங்கு குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அங்கு குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக அங்கு இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்