காய்கறி கழிவுகளால் துர்நாற்றம்

Update: 2022-05-03 14:25 GMT
சென்னை நன்மங்கலம் ஏரி அருகே குப்பைகள் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த இடத்தில் தேங்கி இருக்கும் காய்கறி கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேட்டுக்கும் வழி வகுக்கிறது. இந்த இடத்தை கடந்து செல்லும் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் இருப்பதால் விரைவில் குப்பைகள் அகற்றப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்