குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-08-27 10:28 GMT

கோவை பத்திரப்பதிவு அலுவலக பகுதியில் தேவாலயம் மற்றும் பள்ளி உள்ளது. இதன் அருகில் குப்பைகளை கொட்ட தொட்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்த குப்பை தொட்டி அடிக்கடி நிரம்பி வழிகிறது. ஆனால் குப்பை முறையாக அகற்றப்படுவது இல்ைல. இதனால் அங்கு குப்பை குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்