சுகாதார சீர்கேடு

Update: 2023-08-27 10:26 GMT

கோவை தொப்பம்பட்டி லட்சுமி நகர், சுமங்கலி நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதற்கு பொது இடம் எதுவும் இல்லை. இதனால் அங்குள்ள குட்டையில் கொட்டி வருகின்றனர். இதன் காரணமாக குட்டை நீர் மாசுபட்டு, கழிவுநீராக காணப்படுகிறது. அங்கிருந்து கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் விரைவாக தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்