நாகை மாவட்டம் வடக்குபொய்கைநல்லூர் முத்துமாரியம்மன் கோவில் அருகே குப்பைகள் குவிந்துகிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி குவிந்து கிடக்கும் குப்பைகளில் இரைதேடி கால்நடைகள் அதிகளவில் வருகின்றன. இவை சாலையில் அங்கும், இங்கும் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?