மருத்துவ கழிவுகளால் சுகாதாரக்கேடு

Update: 2023-08-20 15:46 GMT
திருப்பூர் மற்றும் தாராபுரம் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகள், கோழிப்பண்ணைகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுகளை லாரிகளில் ஏற்றி வந்து தாராபுரம்- ஒட்டன்சத்திரம் 4 வழிச்சாலையோரங்களில் கொட்டி செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்