சுகாதார சீர்கேடு

Update: 2022-07-25 09:25 GMT

பேயன்குழி பகுதியில் இரட்டைகரை கால்வாயின் மீது பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாயில் சிலர் பிளாஸ்டிக் மற்றும் கோழிக்கழிவுகள், குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால், கால்வாயில் தண்ணீர் மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், அந்த பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாய்யை தூர்வாருவதுடன், அங்கு குப்பைகள், கோழிக்கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்