குப்பையால் சுகாதார சீர்கேடு

Update: 2023-08-20 11:22 GMT
தர்மபுரி தீயணைப்பு நிலையத்தின் அருகே உள்ள தார்சாலை மாவட்ட காவல் அலுவலகம், கருவூல காலனி ஆகியவற்றிற்கு பொதுமக்கள் சென்று வரும் முக்கிய சாலை ஆகும். இந்த சாலை வழியாக தினமும் போலீசார், பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் சென்று வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள கோவிலுக்கும் ஏராளமான பக்தர்கள் சென்று வருகிறார்கள். இந்த சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டியில் குப்பைகள் எடுக்காததால் சாலை வரை பரவி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இந்தப் பகுதியில் இருக்கும் குப்பை தொட்டிகளில் கொட்டப்படும் குப்பைகளை அவ்வப்போது அகற்றி இந்த பகுதியின் சுற்றுப்புறச் சுகாதாரத்தை பாதுகாக்க சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்