பாதசாரிகள் அவதி

Update: 2023-08-20 07:14 GMT

பாதசாரிகள் அவதி

கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட பின்குளத்தில் இருந்து பாத்திமாபுரம், கிள்ளிகுளம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. விஷப்பூச்சிகள் வசிப்பிடமாக மாறி வருதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, பாதசாரிகள், வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையோரத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரதீஸ், கொல்லங்கோடு.

மேலும் செய்திகள்