மலைபோல் குவிந்துள்ள குப்பை

Update: 2023-08-16 18:28 GMT
உளுந்தூர்பேட்டை தாலுகா எலவானாசூர்கோட்டை புறவழிச்சாலையில் உள்ள சின்னமாந்தர் ஏரிக்கரையில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பைகள் அவ்வப்போது எரிக்கப்படுவதால், வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்துவதோடு, இதுபோன்று குப்பைகள் கொட்டப்படுவதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்