தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2023-08-16 07:30 GMT

நாகர்கோவில் அப்டா மார்க்கெட்டில் இருந்து பார்வதிபுரம் சானல் வரை செல்லும் நான்கு வழிச்சாலை உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் சிலர் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள், இறைச்சி கழிவுகள் மற்றும் செப்டிக் டேங்க் கழிவுகள் கொட்டி தீவைத்து எரித்து வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் புகை மூட்டம் மற்றும் துர்நாற்றம் வீசுவதால் வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த பகுதியில் கொட்டப்பட்டுள்ளை குப்பைகளை அகற்றுவதுடன், குப்பையை ெகாட்டுபவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வம், புத்தேரி.

மேலும் செய்திகள்