குப்பைகளை எரிப்பதால் சுகாதாரக்கேடு

Update: 2023-08-13 16:53 GMT

வேடசந்தூரில் குடகனாற்று பாலத்திற்கு அடியில் குப்பைகள் கொட்டப்பட்டு, தீவைத்து எரிக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து கொள்கிறது. அப்போது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைவதுடன், புகையால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கி வருகின்றனர். அதேபோல் குடியிருப்பு பகுதிகளில் புகைமண்டலம் செல்வதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்