சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2023-08-06 11:31 GMT

கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் ஊராட்சி சஞ்சாய் நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டு வருகிறது. மேலும் இவை மாத கணக்கில் அகற்றப்படாமல் உள்ளதால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தற்போது வீசும் ஆடி மாத காற்றில் குப்பைகள் காற்றி பறந்து ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்