குப்பைத்தொட்டி வேண்டும்

Update: 2023-07-23 12:36 GMT

தஞ்சை தொல்காப்பியர்நகர் பகுதியில் உள்ள சாலையோரத்தில் குப்பைத்தொட்டி இல்லை. இதனால் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதன்காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், துர்நாற்றம் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மூக்கை மூடியபடி அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும், அங்கு குப்பைத்தொட்டி வைக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்