கூடுதல் குப்பை தொட்டிகள்

Update: 2023-07-23 10:23 GMT

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு தினமும் சுமார் 5 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் குப்பைகள் அதிகளவில் குவிந்து வருகிறது. அங்குள்ள குப்பை தொட்டிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதன் காரணமாக பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. எனவே அங்கு கூடுதலாக குப்பை தொட்டிகளை வைத்து, சுகாதாரத்தை பேண அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்