புகையால் பொதுமக்கள் அவதி

Update: 2023-07-19 13:53 GMT

புகையால் பொதுமக்கள் அவதி

திருப்பூர் வடக்கு ஒன்றியம் பெருமாநல்லூர் ஊராட்சியில் மெயின் ரோட்டில் உள்ள தெப்பக்குளம் அருகில் உள்ள பாலத்தின் கீழ் இரு பகுதிகளிலும் குப்பையில் தீ கொழுந்து விட்டு எரிகிறது. இதனால் அந்த பகுதி புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. பொதுமக்கள் மூச்சுவிட சிரமப்பட்டு வருகிறார்கள். குப்பை கொட்டுபவர்கள் குப்பை அள்ளும் நபர்களிடம் கொடுத்தால் இதுபோல பிரச்சினைகள் வராது. பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டி விட்டு தீ வைத்து விடுகிறார்கள். இதனால் பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படுகிறது. இதை கவனத்தில் கொண்டு ஊராட்சியுடன் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பா.குமார்,பெருமாநல்லூர்

86675 81997

மேலும் செய்திகள்