சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2023-07-19 11:26 GMT

கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி, நாவல்நகர் காலனியின் மெயின் சாலை ஓரத்தில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் காற்று பலமாக அடிக்கும்போது இங்கு கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் கவர்கள் காற்றில் பறந்து பல்வேறு இடங்களில் விழுகிறது. இதனால் இப்பகுதியில் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் கழிவுகளாக காட்சியளிக்கிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்