குவிந்து கிடக்கும் இறைச்சி கழிவுகள்

Update: 2023-07-16 14:32 GMT

புதுச்சேரி திருவண்டார் கோவில் இருந்து கொத்தபுரிநத்தம் செல்லும் சாலையோரத்தில் இரவு நேரத்தில் கோழி இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகின்றனர். இதனால் சாலையோரத்தில் மலைபோல் இறைச்சி கழிவுகள் குவிந்து கிடக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோழி இறைச்சி கழிவுகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்