சுகாதார சீர்கேடு

Update: 2023-07-16 07:28 GMT

பாலப்பள்ளம் பேரூராட்சி ஆலஞ்சி பகுதியில் நியாய விலை கடை, தபால் நிலையம் மற்றும் குடிநீர்தொட்டி அமைந்துள்ளது. இதன் அருகில் உள்ள கிணற்றில் இறைச்சி, மீன்கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகளை தொடர்ச்சியாக கொட்டிவருகின்றனர். இதனால், கிணறு நிரம்பி குப்பை மேடாகிவிட்டது. மேலும் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி கிணற்றில் உள்ள குப்பை, கழிவுகளை அகற்றுவதுடன், அதன் மீது கம்பிவலை அமைத்து மழைநீர் சேகரிப்பு கிணறாக பயன்படுவேண்டும்.

-சுனில்ராஜ், ஆலஞ்சி.

மேலும் செய்திகள்