குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-07-12 11:47 GMT

கரூர் மாவட்டம், மண்மங்கலம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடைக்கு ஒன்று உள்ளது. இந்த நிழற்குடையின் பின்புறம் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி, கொசு தொல்லை அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் சாலைகளில் வாகன விபத்தில் சிக்கும் நாய்களையும் இந்த குப்பையில் வந்து போட்டு விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்