வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-07-12 09:33 GMT

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி தாலுகாவிற்கு உட்பட்ட கூடலூர் கனககிரி கிராம எல்லையில் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் ரோடு அருகே மகுடஞ்சாவடி சுற்றுப்பகுதியில் உள்ள கோழி இறைச்சி கடையிலிருந்து கோழி கழிவுகளை கொட்டுகின்றனர். தூய்மை பணியாளர்களே குப்பைகளை ரோட்டில் வீசுகின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மர்மநபர்கள் குப்பைகளை தீ வைத்து செல்வதால் அருகில் உள்ள மின்கம்பம் தீப்பிடித்து எரிய வாய்ப்பு அதிகமாக உள்ளது. புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகளுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.

மேலும் செய்திகள்