குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2023-07-09 18:04 GMT
சங்கராபுரம் அருகே செம்பராம்பட்டு வழியாக தியாகராஜபுரம் செல்லும் சாலையின் ஓரத்தில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுவதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மூக்கை மூடிக்கொண்டு செல்கின்றனர். மேலும் இதன் காரணமாக தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே குப்பைகளை அவ்வப்போது அப்புறப்படு்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்