குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2023-07-09 18:04 GMT
சிதம்பரம் லால்கான் தெருவில் சாலையோரத்தில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்துவதோடு, அப்பகுதியில் சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்