செடிகள் அகற்றப்படுமா?

Update: 2023-07-05 13:59 GMT


தஞ்சை பெரியகோவில் அருகே உள்ள கல்லணைக்கால்வாய் பாலம் அருகே உள்ள ஒரு மின் கம்பத்தில் செடி வளர்ந்து கிடக்கிறது. இதனால் இந்த மின்கம்பத்தில் விளக்கு எரிந்தாலும் செடிகள் உள்ளதால் போதிய வெளிச்சம் இல்லை . இதனால் இந்தபகுதி இருள் சூழ்ந்து உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பத்தில் செடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்