கரூர் மாவட்டம், மண்மங்கலம் பகுதியில் மளிகை கடைகள், காய்கறி கடைகள், பலகார கடைகள், டீக்கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் அடங்கிய குப்பைகளை அங்குள்ள தார் சாலை ஓரத்தில் நெடுகிலும் கொட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.