தஞ்சை சீனிவாசபுரம் பகுதி சிங்கபெருமாள் குளம் அருகே வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டி பராமரிப்பின்றி கீழே விழுந்துகிடக்கிறது. இதனால் குப்பைத்தொட்டியை சுற்றி பொதுமக்கள் குப்பைகளை கொட்டி செல்கின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும், குப்பைகள் அவ்வப்போது தீயிட்டு கொளுத்தப்படுகிறது. இதன்காரணமாக வெளியேறும் புகையினால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குப்பைத்தொட்டியை சரிசெய்யவும், குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுப்பார்களா?