சுகாதார சீர்கேடு

Update: 2023-07-02 12:42 GMT

பெரம்பலூர் நகராட்சி 18-வது வார்டுக்கு உட்பட்ட பெரிய தெற்கு தெருவில் இருந்து வெள்ளந்தாங்கி அம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையில் கழிவறைக்கு அருகே கொட்டப்படும் குப்பைகள் முறையாக அள்ளப்படுவதில்லை. இதனால் அந்தப்பகுதியில் தற்போது குப்பைகள் மலை போல் குவிந்து வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்தப்பகுதிக்கு யாரும் அதிகாரிகள் வந்தால் தான் அந்த குப்பைகள் அகற்றப்படுகிறது. இதனால் அந்தப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், அந்த இடத்தில் குப்பைகள் கொட்டக்கூடாது என்று அறிவிப்பு பதாகையை வைக்கவும் நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்