குப்பைக்கு தீ வைப்பதால் மூச்சுத்திணறல்

Update: 2023-06-28 11:59 GMT

குப்பைக்கு தீ வைப்பதால் மூச்சுத்திணறல்

பெருமாநல்லூர் ஊராட்சி சி.எஸ்.ஐ. காலனியில் இருந்து பாலசமுத்திரம் செல்லும் வழியில் குப்பைகளைசாயைின் ஓரத்தில் கொட்டி செல்கிறார்கள். அதில் மர்ம ஆசாமிகள் தீ வைத்து விடுகிறார்கள். தற்போது தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. அங்கு புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. குப்பைகளை கொட்டுவதை தடுக்கவும், தீயை அணைக்கவும் ஊராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார்,பெருமாநல்லூர்.

8667581997.

மேலும் செய்திகள்