குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-06-25 14:57 GMT

ஈரோடு திருவேங்கிடசாமி கோவில் வீதியில் சிலர் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் மலை போல் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. ரோட்டில் ஆங்காங்கே குப்பைகள் பரவி காணப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. ரோட்டில் நடந்தோ, வாகனங்களிலோ செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. ரோட்டில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்