புகைமூட்டத்தால் அவதி

Update: 2023-06-25 14:00 GMT

அந்தியூர் அருகே பிரம்மதேசம் ஊராட்சிக்கு உள்பட்ட பிரம்மதேசம் புதூரில் சேகரிக்கப்படும் குப்பைகள் காட்டுப்பாளையம் அருகே ரோட்டோரத்தில் உள்ள கிணற்றில் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் எழும் புகைமூட்டம் காரணமாக ரோட்டில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறலால் அவதிப்படுகிறார்கள். பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். குப்பைகளை வேறு இடத்தில் கொட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்