நடவடிக்கை தேவை

Update: 2023-06-21 12:32 GMT

கன்னியாகுமரி பேரூராட்சிக்கு ஐகிரவுண்டு சாலையில் பொதுப்பணித்துறை அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் அருகில் சிலர் குப்பைகளை கொட்டி வந்தனர். இதையடுத்து அதிகாரிகள் அங்கு குப்பைகளை கொட்டக்கூடாது என எச்சரிக்கை பதாகையை வைத்துள்ளனர். ஆனாலும், சிலர் அங்கு குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், குப்பைகளில் இரைதேடி வரும் தெருநாய்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அங்கு குப்பைகளை கொட்டுபவர்கள் மீது அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரிஜி, கன்னியாகுமரி.

மேலும் செய்திகள்